பிரதி சபாநாயகர் சிவசிதம்பரத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

முன்னாள் பிரதி  சபாநாயகரும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினருமாகிய முருகேசு சிவசிதம்பரத்தின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.

வடமராட்சி,நெல்லியடிப் பகுதியில் அமைந்துள்ள இவரது திருவுருவச் சிலைக்கு முன்பாக எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் நினைவு நிகழ்வு இடம்பெற்றது. 

திருவுருவச் சிலைக்கு முன்பு ஈகைச் சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

 உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டும் அஞ்சலி செலுத்தப்பட்டது.














Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment