விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் இயக்குனர் மோகன் ராஜாவுக்கு மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து ரீமேக் படங்களை மட்டும் இயக்கி வந்த மோகன் ராஜா தனி ஒருவன் மூலம் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார்.
தற்போது மோகன் ராஜா தனி ஒருவன் இரண்டாம் பாகத்துக்கான பணிகளில் இறங்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க உள்ளது. நடிகர் விஜய்யை வைத்து மற்றொரு படத்தை இயக்கவுள்ளதாகவும் மோகன் ராஜா சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், விஜய்யுடன் இணைய வேண்டிய படம் தாமதமானதற்கான காரணம் குறித்து மோகன் ராஜா விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘விஜய்யுடனான படம் தாமதமானதற்கு என்னுடைய தவறுதான் காரணம். படத்துக்காக விஜய் தயாராக இருக்கிறார். படம் பற்றி அடிக்கடி என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார். அவருக்கு தனி ஒருவனும், வேலைக்காரனும் மிகவும் பிடித்திருந்தது.
என்னுடைய வாழ்வில் மிகவும் முக்கியமான நபர். அவரது நட்பு எனக்கு மிகவும் முக்கியம். ஆனால், தனி ஒருவன் இரண்டாம் பாகத்துக்குப் பிறகுதான் விஜய்யின் படத்தை தொடங்க வேண்டும் என்று நான் விடாப்பிடியாக இருந்துவிட்டேன். என்னால் படம் தாமதமாவதற்கு விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவரது ரசிகர்கள் எனக்கு எப்போதும் ஆதரவளித்துள்ளனர். ஆனால், அவர்களின் பொறுமைக்கு ஏற்ப நிச்சயம் நல்ல படமாகக் கொடுப்பேன்’. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment