கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி

தெலுங்கு பட உலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, அரை நிர்வாணப் போராட்டத்திலும் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தெலுங்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் மீதும் புகார் கூறினார் ஸ்ரீரெட்டி. இவர் அவ்வப்போது தனது பேஸ்புக் பக்கத்தில் சிலரை பற்றி பதிவு செய்து வருவார்.
தற்போது நடிகை கீர்த்தி சுரேஷை பற்றி விமர்சித்துள்ளார். அதில், நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் பயணித்தோம். நான் உட்பட யாராலும் கீர்த்தி சுரேஷை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. என்னிடம் பலர் செல்பி எடுத்துக்கொண்டனர்.
உடல் எடையைக் குறைத்ததற்குப் பின்னர் கீர்த்தி சுரேஷ் நோயாளி போல் இருக்கிறார். அவர் நடித்த மகாநதி படம் இயக்குனரால்தான் சிறப்பாக வந்தது. கீர்த்தி சுரேஷின் திறமையால் அல்ல. தற்போது சாய் பல்லவி மிகவும் சிறப்பாக வளர்ந்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment