எந்தவித அறிவித்தலுமின்றி எனக்கு எதிர்க்கட்சி ஆசனம் வழங்கியுள்ளனர்

எந்தவித அறிவித்தலுமின்றி தனக்கு எதிர்க்கட்சி ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
51 நாட்கள் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் தனக்கு எதிர்கட்சி ஆசனம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆசனம் வழங்குவதற்கு முன்னர் தன்னிடம் அது தொடர்பில் கருத்துக்கள் கேட்கப்படவில்லை எனவும் அது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை எனவும் விஜேதாச ராஜபக்ஷ எம்.பி தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் தான் ஆராயவில்லை எனவும், முறைப்பாடுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும், எந்த பகுதியில் இருந்தாலும் தனது வேலையை சரியாக செய்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment