பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை செயலாளர்களின் கூட்டம் முதல் முறையாக பிரதமர் இல்லத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சரவை செயலாளர்களும், 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் ஒரு சில துறை சார்ந்த மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில் அரசின் எதிர்கால இலக்குகள் மற்றும் அதனை அடைய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தும் கருத்துகேட்பு மற்றும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த கூட்டம் இன்று மாலை 6.30 மணியளவில் பிரதமர் இல்லத்தில் நடைபெற உள்ளது.2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் இதே போன்று அமைச்சரவை செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment