பாஜக இன்னும் வெற்றியின் உச்சத்தை அடையவில்லை : அமித் ஷா

டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் கட்சி அலுவலகத் தலைவர்கள், மாநிலக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அமித் ஷா கட்சித் தலைவர்களிடயே பேசும்போது, ‘‘303 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையோடு நாம் வெற்றி பெற்றிருந்தாலும் வெற்றிக்கான உச்சத்தை இன்னும் அடையவில்லை. 2014-ம் ஆண்டு பா.ஜ.க தேசிய ஆலோசனை கூட்டத்தில் பேசியபோதும் இதை நான் கூறினேன், தற்போதும் கூறுகிறேன் நம் கட்சி இன்னும் சிறந்த நிலையை அடைய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நாம் நம்மையே அர்ப்பணிக்க வேண்டும் என கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.
2014-ம் ஆண்டு, ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் பாஜக இரண்டு நாள் தேசிய நிர்வாக கூட்டத்தில் உரையாற்றும்போது, 2014 பொதுத் தேர்தலுக்கு பிறகு பாஜக அதன் உச்சநிலையை அடைந்ததாக மக்கள் பலர் கூறினர், ஆனால் அது அவ்வாறு இல்லை. 2017-ம் ஆண்டு உத்தர பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்த போதும் பாஜக தனது உச்சநிலையை அடைந்துள்ளது என கருத்துக்கள் வந்தது. ஆனால் அப்போதும் அவ்வாறு இல்லை.
"அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. முதல் மந்திரிகள் ஆட்சி செய்யும்போதுதான், அதன் உச்சத்தை அடையும். பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை பாஜக-விற்கு தொண்டர்கள் உள்ளனர்" என அமித் ஷா கூறினார். ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் பாஜக படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment