ராஜிதவின் உரிமை பறிக்கப்பட வேண்டும் - வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக வவுனியா மருத்துவமனை மருத்துவர்களால் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. 

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் வவுனியா பொது மருத்துவமனை முன்பாக  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாட்டின் சுகாதார சேவைக்கு மிகப் பாதகமான முறையில் நடந்துகொள்வதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் மட்டத்தில் அதிகமான பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். 

அமைச்சரின் முறைகேடுகள் தொடர்பாக தாம் ஆதாரங்களுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறையிட்டுள்ள போதிலும் இதுவரை காலமும் அவருக்கெதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சரின் குடியியல் உரிமை பறிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச குற்றச்சாட்டுகள் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களும் இதன்போது மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment