ஐ.எஸ் தீவிரவாதிகளின் புதிய யுத்தி குறித்த தகவல் வெளியானது

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஐரோப்பியர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011 முதல் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவர்கள் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் தன் பகுதியை இழந்த ஐ.எஸ் அமைப்பினர், தனது அமைப்பில் சேர்ந்துள்ள வெளிநாட்டவரை சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்பதை புது தந்திரமாக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
இதன் ஊடாக ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment