கூட்டாக பதவி விலகல் தவறான நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது

பதவி விலகிய முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் தமத அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, கூட்டாக பதவி விலகியமை சர்வதேச மட்டத்திலும் தவறான நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு சிலரின் தவறான செயற்பாடுகளை கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது முற்றிலும் தவறானதாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலை ஆளும் தரப்பும், எதிர் தரப்பும் ஒரு அரசியல் பிரச்சாரமாகவே பயன்படுத்திக் கொண்டது. பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசியல்வாதிகளும் பொறுப்பற்ற விதமாக கருத்துக்களை குறிப்பிட்டு பிரச்சினைகளை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.
அரசியல் தேவைகளுக்காக எல்லை மீறி செயற்பட்டுள்ளமையினால் சாதாரண மக்கள் இன்று பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment