நன்றாக விளையாடினால் யாரையும் வீழ்த்துவோம்- விராட் கோலி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாளை மேன்செஸ்டரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
இதுவரை விளையாடிய 3 லீக் ஆட்டங்களில் இந்திய அணி 2-ல் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதேபோல் இதுவரை 4 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 1 வெற்றி, 2 தோல்வி அடைந்து, புள்ளிபட்டியலில் பின்தங்கியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பாகிஸ்தானுடனான போட்டி மட்டுமல்ல, எங்களை பொறுத்தவரை அனைத்து போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். நன்றாக விளையாடினால் யாரையும் வீழ்த்துவோம். நன்றாக கிரிக்கெட் விளையாடுவதால் தான், நாங்கள் உலகின் தலைசிறந்த அணியாக திகழ்கிறோம்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment