சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை 2வது முறை அதிகரிப்பு

சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 2வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிலாவின் தென்பகுதியை ஆராய்ச்சி செய்ய சந்திரயான் 2 என்ற விண்கலத்தை கடந்த திங்கள் கிழமையன்று இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. புவி வட்டப் பாதையில் இயங்கி வரும் விண்கலத்தின் உயரம் கடந்த இரு நாட்களுக்கு முன் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்று இரவு ஒரு மணியளவில் 2வது முறையாக சுற்று வட்டப்பாதையின் உயரம் மேலும் அதிகரிக்கப்பட்டது. சுமார் 883 விநாடிகள் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகளைத் தொடர்ந்து விண்கலம் 54 ஆயிரத்து 829 கிலோ மீட்டர் உயரத்தைத் தொட்டுள்ளது.
இந்தப் பணிகள் வெற்றிகரமாக நடந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 3வது முறையாக வரும் 29 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை அதிகரிக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் புவிட்டப் பாதையில் இருந்து விலகி, ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் பயணிக்க தொடங்கும்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment