தபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்

தபால் ஊழியர்கள் சங்கம் இன்று  மாலை 4.00 மணி முதல் இரண்டு நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் எடுத்துள்ளனர்.
ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள முரண்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரியே இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தபால் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வு தர மறுத்தால், இப்போராட்டத்தை தொடராக முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment