பயங்கரவாதிகளை தேடி அழிப்பது எமது பிரதான இலக்கு

தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுதல் ஆகிய முக்கிய மூன்று அடிப்படைகளின் கீழ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
நேற்று   கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
நாம் கடந்த காலத்தில் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் போது அவர்கள் எமது முகாம்களை வந்து தாக்கும் வரை இருக்காமல், அவர்களது முகாம்களைத் தேடி தாக்குதல் நடத்தியே நாம் யுத்தத்தை வெற்றிபெற்றோம் எனவும் பசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டிலுள்ள இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கியமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment