காணி உறுதி வழங்குவதை தடுத்து நிறுத்த முனைந்தால், வீதிக்கு வருவோம்- பிரதமர்

இலங்கை மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக காணி உறுதிப் பத்திரங்கள் கிடைக்காத 1456 பேருக்கு, காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று  அம்பாறையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இவ்வாறு தடுத்து நிறுத்த யாராவது முற்படின், மக்களுடன் பாதையில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யவும் தயார் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
காணி உறுதிகளை வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்தை தயாரித்து அமைச்சரவையின் அனுமதிக்கு அனுப்பப்பட்டபோது அதற்கு அனுமதியைப் பெற இரு வருடங்கள் சென்றது. தற்பொழுது அதற்கான சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளதாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment