மரண தண்டனைக்கு எதிரான மனு – விசாரணைகளுக்காக குழு நியமனம்

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழுவின் உறுப்பினர்களாக தீபாளி விஜேசுந்தர, ஜனக் த சில்வா, அச்சல வெங்களப்புலி, அர்ஜுன ஒபேசேகர  பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுத்து நிறுத்துமாறு தெரிவித்து ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்ன இந்த ரீட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதேவேளை இன்று 
 காலை 11.30 மணியளவில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment