பூஜித் ஜயசுந்தரவும் வைத்தியசாலையில் அனுமதி?

கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று   முன்னிலையாகுமாறு பூஜித் ஜயசுந்தரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அவர் சுகயீனம் காரணமாக நாராஹென்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment