தண்டவாளத்தில் ஓடிய நாயால் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

லண்டனில் நாய் ஒன்றின் செயலால் வாட்டர் லூ ரயில்நிலையத்தில் 24 நடைமேடைகள் மூடப்பட்டன.
வாட்டர் லூ ரயில் நிலையத்துக்கு தனது செல்லப்பிராணியான நாயுடன் வந்த ஒரு உரிமையாளரின் பிடியில் இருந்து நாய் நழுவிச் சென்று தப்பியது.
அது தண்டவாளத்தில் பாய்ந்து பாய்ந்து ஓடிவிட, அதைத் துரத்திக் கொண்டே அதன் உரிமையாளர் பின்னால் ஓடினார். இதனால் முன்னெச்சரிக்கையாக 24 நடைமேடைகள் மூடப்பட்டன, வாட்டர் லூ ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் ரயில்கள் ஆங்காங்கே 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன.
லண்டனில் இந்த ஜூலையின் கடும் வெப்பம் தகித்த வியாழனன்று ரயிலுக்குள் மாட்டிக்கொண்ட பயணிகள் வெப்பம் தாங்கமுடியவில்லை என புலம்பித் தள்ளினர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment