வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்.

வவுனியாவில் சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு  போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

மதியம் 12 மணியளவில் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து விசேட வழிபாடுகளை மேற்கொண்ட காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள்  கந்தசாமி கோவில் வீதி வழியாக மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து கண்டிவீதி வழியாக  தொடர்போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழ்கூட்டமைப்பின் சாணக்கியம், நல்லிணக்கம், ராஜதந்திரம், யாவும் இனப்படுகொலையே என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையை ஏந்தியிருந்ததுடன், அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.

இவர்களது போராட்டம்  ஓரிரு நாள்களில் 900  நாளை எட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment