மாணிக்ககல் அகழ்ந்த எழுவர் கைது

சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்த எழுவர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ – டின்சின் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இன்று காலை பொகவந்தலாவ பொலிஸாரினால் குறித்த எழுவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய  உபகரணங்களும்  கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 






Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment