இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த ஒன்பது மீனவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் இரு படகுகளையும் கைப்பற்றினார்கள்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை நேற்று யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நீரியல் வளத்துறை அதிகாரிகளால் ஊர்காவற்துறை நீதிவான் முன்னிலையில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதேவேளை கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்ட மீனவர்களில் ஒருவரின் தலையில் காயமேற்பட்ட நிலையில் அதற்று சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த காயத்திற்கான காரணத்தை அறிய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment