பிரெக்ஸிட்: தெரீசா மேவின் ஒப்பந்தம் பெரும் தோல்வி









பிரிட்டன் பிரதமர் தெரீசா மே முன்னெடுத்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இது பிரிட்டன் வரலாற்றில் ஓர் ஆளும் அரசுக்கு ஏற்பட்ட மிக பெரிய தோல்வியாக கருதப்படுகிறது.

வரும் மார்ச் 29-இல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு சில விதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய இந்த ஒப்பந்தம் தொடர்பாக வாக்களித்த எம்.பி.க்கள் எதிராக 432 வாக்குகளும், ஆதரவாக 202 வாக்குகளையும் பதிவு செய்தனர்.

தற்போது பிரதமர் தெரீசா மேயின் அரசு மீது தொழிலாளர் கட்சி தலைவரான ஜெர்மி கோபின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ள சூழலில், இது பொது தேர்தலுக்கு வழிவகுக்கக்கூடும்.

இதனிடையே புதன்கிழமை மாலை 1900 (ஜிஎம்டி) மணிக்கு இது தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

இந்த தோல்வி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்ட பிரிட்டன் பிரதமர் தெரீசா மே இது மிக பெரிய வீழ்ச்சியாக கருதப்படுகிறது.

முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது என்று இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் மக்களிடம் கருத்தறிந்து முடிவு எடுக்கப்பட்டது.

அப்போதிருந்து, வெளியேறுதலுக்கான நடவடிக்கைகளின் விவரங்களில் ஒப்புதல் ஏற்படுத்துவதற்காக கடினமான பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment