தேசியதினமாகும் சுதந்திரதினம்!

சுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டங்களை தேசிய தின கொண்டாட்டமாக அறிவிக்கவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.

அது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசிய அமைச்சர் வஜிர அபேவர்தன, அரசியல் அமைப்பின் எட்டாம் சரத்தில் சுதந்திர தினம் என்பதற்கு பதிலாக தேசிய தினம் என குறிப்பிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.

அரசியல் அமைப்பின் பிரகாரம் இனிவரும் காலங்களில் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி தேசிய தினமாக கொண்டாடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அதன்படி, பெப்ரவரி மாதம் கொண்டாடப்படுவது தேசிய தினமே அன்றி சுதந்திர தினமல்ல என தெரிவித்தார்.



Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment