ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்.-உச்சநீதிமன்றம் உத்தரவு!


டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஆலைக்கு சீல் வைத்து மூடப்பட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், 'சில நிபந்தனைகளுடன் ஆலையை மீண்டும் திறக்கலாம்'' என கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் கடந்த 2ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அதில், 'ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அதனை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணை மீது தீர்ப்பாயங்கள் விசாரணை மேற்கொள்ள அதிகாரம் கிடையாது. அதேபோல், ஆலையை மீண்டும் திறந்து இயக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு உச்ச நீதிமன்றமே ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்'' என குறிப்பிடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு மற்றும் ஆலையை திறக்க தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு மனு ஆகிய இரண்டையும் உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. இதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.



Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment