கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்றையதினம் ஆரம்பமாகின்றது

இலங்கையையிலிருந்து  ஏழாயிரம் பக்தர்களும் இந்தியாவிலிருந்து  இரண்டாயிரத்து  நானூறு   பக்தர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடம்தோறும் இடம்பெறும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. 

இன்றைய  தினம் மாலை 5 மணிக்கு  கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகின்றது. 

நாளை சனிக்கிழமை காலை யாழ். ஆயர் வண. ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின்  சிறப்புத் திருப்பலி  தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

திருப்பலியின் பின்னர் தேர் பவனியும், அதனைத் தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற்று திருவிழா நிறைவடையவுள்ளது.   

இந்திய – இலங்கை பக்தர்கள் கலந்துகொள்வதற்குரிய சகல ஏற்பாடுகளையும் இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment