கசிப்பு உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு

கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று தங்கமலை பெருந்தோட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.

பதுளை ஹப்புத்தளை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த கசிப்பு நிலையம் கண்டறியப்பட்டது.

பரல்களில் நிரப்பப்பட்டிருந்த கசிப்பு , கசிப்பு தயாரிப்பதற்கான ‘ ஸ்பீறிட்’ என்று அழைக்கப்படும் மூலப் பொருள்கள் மற்றும் உபகரணத் தொகுதிகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டனர்.

அங்கிருந்து தப்பியோட முயற்சித்த நான்கு பேரும் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment