மன்னார் வான்பரப்பில் ஆள் இல்லா விமானம்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி-பேசாலை வான் பரப்பில்ஆள் இல்லாத விமானம் ஒன்று  நேற்றிரவு   வட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகின்றது.

படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து,  அப்பகுதியில் உள்ள இராணுவத்தினர் வானத்தை நோக்கிச் சுமார் 30 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரையோகம் மேற் கொண்டுள்ளனர்.

சுமார் 30 நிமிடங்கள் வரை வானத்தை நோக்கிய துப்பாக்கி பிரையோக சத்தம் கேட்டதை அப்பகுதி மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் ஆள் இல்லாத விமானம் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாக வில்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தலைமன்னார் பகுதியில் முப்படையினரின் சோதனை நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment