மனைவியைக் காக்க முயன்ற கணவனும் படுகாயம்

மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவனும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் சாவகச்சேரி, மட்டுவில் வடக்கு சந்திரபுரம் பகுதியில் சற்றுமுன்னர் நடந்துள்ளது.

வீட்டில் சமைப்பதற்காக சிலிண்டர் காஸ் அடுப்பை மனைவி பற்ற வைத்துள்ளார். 

அதிலிருந்து வெளியான பெரும் தீச்சுவாலை மனைவி மீது பற்றியது.
இதனையடுத்து மனைவியை காப்பாற்ற  கணவன் முயன்றுள்ளார்.

இந்த நிலையிலேயே குறித்த நபரும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment