விபத்தில் பெண் சாவு ; நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் சிலாபம் –புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பகுதியில்  இன்று  அதிகாலை  நேர்ந்துள்ளது.

விபத்தில் மேலும் காயமடைந்த நால்வர் சிலாபம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார் மற்றும் பாரவூர்தி ஒன்றும்  மோதியதிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் வெள்ளவத்தையைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரே சாவடைந்துள்ளார்.  

விபத்துத் தொடர்பில்  ஆரச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment