கைவிடப்பட்டது காணி நில அளவை

கடற்படையினர் நிலை கொள்வதற்காக பொது மக்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணி சுவீகரிப்பதற்காக இன்று நடைபெறவிருந்த நில அளவை நடவடிக்கை எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. 


இன்று காலை 9 மணியளவில் மண்டைதீவு கிழக்கு அம்மன் கோவில் முன்பாக  இந்த எதிர்ப்புப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மண்டைதீவு கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள கடப்படையினர் அப்பகுதியில் உள்ள சுமார் 11 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியை ஆக்கிரமித்து அதில் முகாமிட்டுள்ளனர். 


குறித்த படைமுகாம் அமைந்துள்ள காணியை நிரந்தரமாக சுவீகரித்து படை முகாமை விஸ்தரிப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். 

குறித்த காணியை சட்ட ரீதியில் சுவீகரிப்பதற்கான முன்னெடுப்புக்களை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி காணிகளை சுவீகரிக்கப் போவதாகவும், அதற்கான நில அளவை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் நில அளவை திணைக்களத்தினால் காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. 


குறித்த அறிவிப்பின்படி இன்று அக் காணிகள் நில அளவை செய்யப்படவுள்ளதாகவும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே காணி சுவீகரிப்புக்கான நில அளவை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் இணைந்து நில அளவையைத் தடுத்து நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை அடுத்து கணி சுவீகரிப்புக்காக நில அளவை செய்யவந்த நில அளவை திணைக்களத்தினர்  நில அளவை செய்யாமல் திரும்பிச் சென்றனர். 
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment