தேடப்பட்டவர்கள் கைது

இலங்கையில்   நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என அறிவிக்கப்பட்டு, பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டிப் பகுதியில் வைத்தே மொஹமட் சாதிக் அப்துல் ஹக், மொஹமட் ஷாஹித் அப்துல் ஹக் ஆகிய இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

 இந்தத் தகவலைப் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து, அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேரை தேடப்படும் நபர்களாக பொலிஸார் அறிவித்தது.

அவர்கள் தொடர்பான விபரங்களையும் புகைப்படம் சகிதம் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment