யாழ்ப்பாணப் பொலிஸாரின் அவசர அறிவிப்பு

பொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் குறித்து தகவல் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தகவல்கள் தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான 119 இற்கு அறிவிக்குமாறு யாழ். தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.

 

அறிமுகமற்றவர்  நடமாடினால் அவரை யார்? என முதலில் விசாரியுங்கள். அதற்கு அவர் மாறுபட்ட தகவல்களை வழங்கினால் பொலிஸ் அவசர பிரிவு இலக்கம் 119 மற்றும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவலை வழங்குங்கள்.

கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நேற்று  வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியோர் கைப்பையுடனேயே வருகை தந்துள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்திலும் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும். சந்தேகத்துக்கு இடமான பொதிகள், பெட்டிகளைக் கண்டவுடன் பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும்.

எந்த நேரத்திலும் துரிதமாகச் செயற்பட பொலிஸார் தயார்நிலையில் உள்ளனர்-என்றார்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment