சாதனை படைத்தது கிளிநொச்சி பெண்கள் அணி

சதுரங்கப் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அணி கிண்ணம் வென்று சாதனை படைத்துள்ளது.

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால்  மாகாண மட்டத்தில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. 


இதில், யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் மாவட்ட மட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து அணிகள் பங்குபற்றின.

இதில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அணி  ஏனைய நான்கு மாவட்ட அணிகளையும் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.


இரண்டாம் இடத்தை யாழ்.மாவட்ட அணியும், மூன்றாம் இடத்தை மன்னார் மாவட்ட அணியும் பெற்றுக்கொண்டது.

ஆண்கள் அணிக்கான போட்டியில் முதலாம் இடத்தை யாழ்.மாவட்ட அணியும், இரண்டாம் இடத்தை கிளிநொச்சி மாவட்ட அணியும். மூன்றாம் இடத்தை முல்லைத்தீவு மாவட்ட அணியும் பெற்றுக்கொண்டன.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment