வவுனியாவில் நால்வர் உயிரிழப்பு

மாடறுப்பு நிலையமொன்றின் கழிவுக் குழியில் விழுந்து  நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் வவுனியா , தாண்டிக்குளம் பம்பமடுவில்  இன்று மதியம் நடந்துள்ளது.

குறித்த நிலையத்தின் கழிவுக் குழியை சுத்தம் செய்யச் சென்றபோதே  குழியினுள் தவறி விழுந்து நால்வரும்  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதித்த போதும் , மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே அவர்கள் உயிரிழந்திருந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த மாடறுப்பு நிலையம் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் உறவினரொருவருக்கு சொந்தமானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வவுனியா மருத்துவமனை பொலிஸார்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment