பொலிஸ்மா அதிபர் பூஜித பதவி விலக வேண்டும் என்கிறார் ராஜித

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உடனடியாகப் பதவி விலக வேண்டும். இவ்வாறு கூறுகிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன .

அலரி மாளிகையில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே  அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து புலனாய்வுப் பிரிவுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்துள்ளது. 

எனினும், உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, பொலிஸ்மா அதிபர் பதவி விலகவேண்டும். ஜனாதிபதியின் கீழ்தான் பொலிஸ் திணைக்களம் இருக்கின்றது. 

இன்று மாலை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதியிடம் மேற்படி கோரிக்கை விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment