சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா
சிறைச்சாலைக்குள்ளே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கலவரத்தில், கைதிகள் ஒருவருக்கொருவர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கலவரத்தைத் தடுக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டனர்.
கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்தனர். கைதிகள் தாக்கியதில் 19 காவலர்கள் காயம் அடைந்தனர். சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment