பாதுகாப்பு நடைமுறைகளை தளர்த்த வேண்டாம்-ரணில்

நாடு முழுவதும், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு நடைமுறைகளை எந்த வகையிலும் தளர்த்த வேண்டாம் என்று   பிரதமர் ரணில் விக்ரமசிங்க படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய  அனைவரும் கைது செய்யப்படும் வரை, பாதுகாப்பு நடைமுறைகளில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டாம் இவ்வாறு கேட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பின்னரான நிகழ்வுகள் குறித்து, பாதுகாப்பு படையினரால், அறிக்கை ஒன்று பிரதமரிடம்  சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில், ஐ எஸ் அமைப்புடன் தொடர்புடைய அனைவரையும், அடுத்த சில நாள்களுக்குள் கைது செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பெற்ற பின்னரே, ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய  எல்லா நபர்களும் கைது செய்யப்படும் வரை, பாதுகாப்பு நடைமுறைகளில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டாம் எனப்  பிரதமர் கேட்டுள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment