மோடிக்கு ஜனாதிபதி தொலைபேசியில் வாழ்த்து

இந்திய பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று பிற்பகல் தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் மிக நெருங்கிச் செயற்படுபவர் என்ற வகையில் அவரது இந்த வரலாற்று முக்கியத்துவமுடைய வெற்றி தொடர்பில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் அவரது எதிர்வரும் ஆட்சிக் காலப்பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொலைபேசியினூடாக குறுகிய உரையாடலொன்றை மேற்கொண்ட இருநாட்டு அரச தலைவர்களும் சகோதர அரசுகள் என்ற வகையில் சமாதானம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்திக்காக ஒத்துழைப்புடன் செயற்பட உறுதிபூண்டனர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment