சிறைக்கூடத்தில் மயங்கி வீழ்ந்த சந்தேகநபர்

ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு  விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதன்போது,  நீதிமன்றத்தின் சிறைக்கூடத்தில் சந்தேகநபர் மயங்கி வீழ்ந்த சம்பவம் ஒன்று மன்னாரில் நடந்துள்ளது. 

சுமார் 902 மில்லி கிராம் நிறை கொண்ட ஹெரோயின்  போதைப் பொருளுடன் தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ரி.சரவணராஜா குறித்த நபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு, விசாரனைக்கான பிறிதொரு திகதியை அறிவித்து  வழக்கை ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் சிறைக்கூடத்தில் குறித்த நபர் அடைக்கப்பட்டு சிறிது நேரத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார்.

விடயம் மன்னார் நீதவான் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நீதவானின் உத்தரவுக்கு அமைய  குறித்த நபர் உடனடியாக மன்னார் பொது வைத்திசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment