பப்ஜி விளையாட மறுப்பு ; விவாகரத்துக் கேட்ட மனைவி

பப்ஜி விளையாட   கணவர் அனுமதி தராததால்  கணவரை விவாகரத்து செய்யக் கோரிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அஜ்மான் நகரில்தான்  இந்த விசித்திரச் சம்பவம் நடந்துள்ளது.

இளைஞர்களிடையே வேகமாகப் பரவி வரும் சில மொபைல் விளையாட்டுகளில் PUBG என்ற மொபைல் விளையாட்டு தீவிரமடைந்து வருகிறது. 

சம்பவம் தொடர்பில்  20 வயதைக் கடந்த பெண் குறித்த பெண் பொலிஸில்  முறைப்பாடு செய்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

‘எனது கணவர், நான் பப்ஜி விளையாட்டை விளையாடுவதற்கு அனுமதி மறுக்கிறார். அதனால், எனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும். எனக்கான பொழுதுபோக்கைத் தீர்மானிப்பதற்கு எனக்கு உரிமை உள்ளது. நான், அளவுடன்தான் பப்ஜி விளையாட்டு விளையாடுகிறேன். எனக்கு, போனில் சற் செய்வது பிடிக்காது. என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நான் இந்த விளையாட்டை விளையாடுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த பொலிஸ் அதிகாரி, ‘அந்தப் பெண் விளையாட்டில் அடிமையாகிவிடக் கூடாது என்று எண்ணி அவரின் கணவன் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

அதுதான் இவர்களுக்கிடையேயான பிரச்னைக்கு காரணம்’என்றார்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment