13 பேருடன் மாயமான விமானம் தேடுதல் பணியில் தொய்வு நிலை

அருணாச்சலப் பிரதேசத்தில் 13 பேருடன் மாயமான ஏ.என்.32 போர் விமானத்தைத் தேடும் பணி, மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மெச்சுகா என்ற இடத்தை நோக்கிச் சென்ற குறித்த விமானம் திங்களன்று மாயமானது. அதைத் தேடும் பணியில் போர் விமானங்கள், உலங்கு வானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அரக்கோணத்தில் உள்ள கடற்படைத் தளத்திலிருந்து P-8I போர் விமானமும் புறப்பட்டுச் சென்று இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது. 

இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகத் தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில், மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக பணியில் தொய்வுநிலை ஏற்பட்டுள்ளது.

தரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர், மலையேறிச் சென்று ஏ என்32 விமானத்தைத் தேடி வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment