புழுதிப் புயலால் 19 பேர் சாவு

புழுதிப் புயலில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில்  இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சுழற்றியடித்த புயலில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தன.  

புயலில் சிக்கி மெயின்புரியில் 6 பேர், எட்டா மற்றும் கஸ்கஞ்சில் தலா 3 பேர், மொராதாபாத், பதான், பிலிபிட், மதுரா, கன்னாஜ், சம்பால் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் தலா ஒருவர் என 19 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் 48 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுக்கும்படி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதன்மை செயலாளர் அவானிஷ் அவஸ்தி  தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment