41 இலங்கையர்களுடன் மூழ்கிக்கொண்டிருந்த படகு! ஆஸி - இலங்கை படையினரால் மீட்பு!

41 இலங்கையர்களுடன் மூழ்கிக்கொண்டிருந்த படகு ஒன்றினை ஆஸ்திரேலிய - இலங்கை கடற்படையினர் இணைந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுளு்ள அந்நாட்டு உள்துறை அமைச்சர் Peter Dutton-உடன் சென்றுள்ள ஆஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படைத்தளபதிகளில் ஒருவரான Major General Craig Furini இந்த தகவலை அங்கு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தமது படையினருடன் இணைந்து குறிப்பிட்ட மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக The Australian ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
“குறித்த சம்பவம் மே மாதம் 23ம் திகதி இடம்பெற்றுள்ளது. படகினுள் தண்ணீர் புகுந்துகொண்டதால் அது மூழ்கத்தொடங்கியபோது. எனினும் அதிஷ்டவசமாக படையினரால் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
படகில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஆஸ்திரேலியா நோக்கிய படகுப்பயணங்கள் தீவிரமடைந்துள்ளதாக அந்த ஊடகம் கூறியுள்ளது.,
மார்ச் 7 ஆம் திகதி இதேபோன்றதொரு பயணத்தின்போது 40 பயணிகளுடன் ஒரு படகு இடைமறிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த தொடர்ச்சியான சம்பவங்களையடுத்து எல்லைப்பாதுகாப்பினை அவுஸ்திரேலிய கரையோர காவல்படையினர் அதிகரித்துள்ளதாகவும்” அவர“கள் தெரிவித்துள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment