அமைச்சர் ரிசாட் பதவி துறந்தமையால் பொங்கல் பொங்கி வழிபட்ட இளைஞர்கள்

அமைச்சர் ரிசாட் பதியுதீன் அமைச்சர் பதவியை துறந்தமையை கொண்டாடும் முகமாக செக்கட்டிபிலவு கிராம இளைஞர்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளின் பின்னர் மத்திய அரசில் பங்கேற்றுள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட மேல் மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் பதவி விலக வேண்டுமென தெரிவித்து நாட்டில் பல போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பதவி விலகியதை அவரால் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமமான சாளம்பைக்குளத்திற்கு அண்மையில் அமைந்துள்ள தமிழ் கிராமமான செக்கடிப்புலவு கிராமத்து இளைஞர்கள் இன்று கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment