மைத்திரியை களமிறக்குவதே ஒருமித்த நிலைப்பாடு – ஐ.ம.சு.கூ

சுதந்திரக் கட்சி சார்பில் மைத்திரிபால சிறிசேனவையே மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவது என்ற ஒருமித்த நிலைப்பாட்டில் தாம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே ஏனைய கட்சிகளிடம் இந்த ஒற்றுமை இல்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தொடர்ந்தும் ஜனாதிபதியாகவும், பொதுஜன பெரமுனவில் ஒருவர் பிரதமராகவும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தயாசிறி ஜயசேகர முன்வைத்துள்ளார்.
இதுவும் கட்சி ரீதியான தீர்மானம் அல்ல. அது ஒரு யோசனை மாத்திரமேயாகும். கூட்டணி அமைப்பது உறுதியானால் அடுத்தடுத்த கட்டங்கள் குறித்து கவனஞ்செலுத்தப்படும்.
சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதியை மீண்டும் களமிறக்குவது என்ற ஒருமித்த நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். எனினும் ஏனைய கட்சிகளில் இந்த ஒற்றுமை கூட இல்லை என்பதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் வேறு எந்தக் கட்சியும் இன்னும் தமது கட்சிக்கான வேட்பாளரைத் தெரிவுசெய்யவில்லை.
தேர்தலில் யார் போட்டியிட்டாலும் அதற்கு நாம் முக்கியத்துவம் வழங்கப்போவதில்லை. எமக்கு வேலைத்திட்டங்களே முக்கியமாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள நிலையில், கூட்டணி தொடர்பான மற்றுமொரு பேச்சுவார்த்தை நாளை இடம்பெறவுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment