யாழ்.கொட்டடியில் விபத்து ; மாணவர்கள் நால்வர் உட்பட ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணம் - கொட்டடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற  விபத்தில் பாடசாலை மாணவர்கள் நால்வர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் உஸ்மானியா பாடசாலைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  காயமடைந்த பாடசாலை மாணவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

வேகத்தை கட்டுப்படுத்த முடியாத முச்சக்கரவண்டியொன்று வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் மீதும் உந்துருளியில் வந்த இரண்டு மாணவர்கள் மீதும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி மோதியில் உந்துருளி தூக்கி எறியப்பட்டு அருகில் அமைந்துள்ள கால்வாயொன்றில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உந்துருளியில் பயணித்த இரு மாணவர்களின் நிலையே கவலைக்கிடமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment