முஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் பதட்டம்

இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும்,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

தமது அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளில் இருந்து விலகுவது குறித்த தீர்மானத்தை இதன்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிவித்தனர். இதைக்கேட்டு அப்சட் ஆன பிரதமர், ரணில் விக்கிரமசிங்க இதனால் அரசாங்கம் ஆட்டம் காணலாம் என தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது குறிக்கிட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர எக்காரணம் கொண்டும், முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி விலகக்கூடாதென வலியுறுத்தியுள்ளார்.

எனினும் தமது தீர்மானத்திலிருந்து பின்வாங்காத, முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவிகளை துறப்பது என்ற தமது தீர்மானத்தில் உறுதியாக உள்ளனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment