வவுனியாவில் வர்த்தக கைத்தொழில் சம்மேளன ஒன்று கூடல்

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்திற்கான ஒன்று கூடல் இன்றையதினம் இடம்பெற்றது.

வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது வடக்கு மற்றும் கிழக்கில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , எதிர்காலத்தில் எதிர்நோக்கும் சாவல்கள் , வடக்கு கிழக்கில் உள்ள வளங்கள் , வியாபார விருத்தியை எவ்வாறு மேற்கொள்ளுவது , பொருளாதார வீழ்ச்சியை எவ்வாறு சீர் செய்வது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு கிழக்கு சம்மேளனத் தலைவர்  ரீ.குலதீபன், வவுனியா மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் கே.அமிர்தலிங்கம், வடக்கு கிழக்கு பகுதியைச் சேர்ந்த வர்த்தக கைத்தொழில் சம்மேளத்தின் தலைவர்கள் , உபதலைவர்கள் , செயலாளர்கள் , ஒருங்கிணைப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.









Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment