பெண் பொலிஸ் அதிகாரிமீது தடியடி

பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர்மீது, ஆளும் கட்சித் தொண்டர்கள் மற்றும், கிராம மக்கள்,  தடிகளால் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம், தெலங்கானா மாநிலத்தின் கோமாராம் பீம் ஆசீபாபாத் மாவட்டத்தில் நடந்துள்ளது.

குறித்த பகுதியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில், அத்துமீறக் கூடாது என வனத் துறையினர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், மரக்கன்றுகளை நடுவதற்குத் தயாராகவிருந்த சிர்பூர் ககாஸ்நகர் பகுதி டிஆர்எஸ் தொண்டர்களும், கிராம மக்களும், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரி மீது திடீரெனத் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து குறித்த பெண் அதிகாரி அருகிலிருந்த உழவியந்திரத்தில், ஏறி நின்றார். அவரது கோரிக்கையை காதில் வாங்கிக் கொள்ளாத டி.ஆர்.எஸ் தொண்டர்கள் மற்றும் கிராம மக்கள், தடிகளால் சரமாரியாகத் தாக்கினர்.

பொலிஸார், வனத்துறையினர், தாக்குதல் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி, படுகாயமடைந்த பெண் பொலிஸ் அதிகாரியை
மருத்துவமனையில் சேர்த்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment