ரத்தின தேரருக்கு ஆதரவாக வவுனியாவிலும் போராட்டம்

அத்துரலிய ரத்தின தேரருக்கு ஆதரவாக வவுனியாவிலும் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கண்டி வீதி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனி நபர் ஒருவர் இன்று காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக சாகும் வரையான உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் ரத்தின தேரருக்கு ஆதரவான போராட்டத்தை கண்டி வீதி பிரதான வீதியிலுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனிநபர் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் அவருக்கு ஆதரவாக இன்னுமொருவரும் இப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.















Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment