கனடா தூதுவர் - முன்னாள் எம்.பி சந்திரகுமார் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்னொன்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமாரை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பு அவரது அலுவலகத்தில்  இன்று  காலை எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது. 


சந்திப்பில் சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரான நாட்டின் நிலைமைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.


முக்கியமாக வடக்கில் முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாக தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பிலும் பேசியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


இதன் போது கனடாதூதுவர் ஊடகங்களிடம்  கருத்து தெரிவித்தபோது,

நான் கிளிநொச்சியில்  நிற்பதில் மட்டும் மகிழ்ச்சியடையவில்லை  பல நாடுகளின் பிரச்சினைகளை  அறிந்து கொண்டவன். 


அந்த வகையில்   வடக்கில் மேலோங்கியுள்ள  பிரச்சினைகளையும் புரிந்துகொண்டுள்ளேன். 

யுத்தத்தின் பின்னரான    அரசியல்  பொருளாதார நிலைமைகள் தொடர்பிலும் அறிந்துகொண்டுள்ளேன்- என்றார்.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment